Basil 1
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் ஏமாந்து போய்விட்டார்கள் மக்கள்: எதிர்கட்சி

Share

வரவு செலவுத் திட்டத்தின் பொது மக்களின் நலனுக்கான எதுவும் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வருமான இழப்பினால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இம்முறை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால் அவர்களின் அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போயுள்ளதாக கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கும், நாட்டுக்கு முதலீடுகளை வரவழைப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்படாமைக்கு எதிர்க்கட்சி வருத்தம் அளிக்கிறது.

அரசாங்க வருமானம் 500 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களே அந்த வருமானம் குறைவதற்கு முக்கிய காரணம்.

வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளினால் நாட்டுக்கு 500 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கிரியெல்ல தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை போக்க நீண்ட கால திட்டமொன்றை மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறானதொரு விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...