Basil 1
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் ஏமாந்து போய்விட்டார்கள் மக்கள்: எதிர்கட்சி

Share

வரவு செலவுத் திட்டத்தின் பொது மக்களின் நலனுக்கான எதுவும் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வருமான இழப்பினால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இம்முறை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால் அவர்களின் அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போயுள்ளதாக கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கும், நாட்டுக்கு முதலீடுகளை வரவழைப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்படாமைக்கு எதிர்க்கட்சி வருத்தம் அளிக்கிறது.

அரசாங்க வருமானம் 500 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களே அந்த வருமானம் குறைவதற்கு முக்கிய காரணம்.

வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளினால் நாட்டுக்கு 500 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கிரியெல்ல தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை போக்க நீண்ட கால திட்டமொன்றை மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறானதொரு விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...