JC.Alawathuwala
செய்திகள்இலங்கை

டொலர் தட்டுப்பாட்டால் மக்கள் அவலம் – ஜே.சி.அலவத்துவல

Share

“தற்போதைய அரசாங்கம் தவறான ஆலோசனையுடன் உரங்களைத் தடை செய்ததால் விவசாய நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கும் மக்கள் அவலத்திற்கும் காரணம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜே.சி. அலவத்துவல.

மேலும், இவ் விவசாய நடவடிக்கையின் வீழ்ச்சியால் தேவையான உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் டொலர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவலம் தமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

இத்தகைய வீழ்ச்சி நிலை நாட்டை எதிர்காலத்தில் பஞ்சத்தினை நோக்கி நகர்த்தும். மரக்கறிகள் ஒரு கிலோ 500 ரூபாவிற்கு மேல் விற்கப்படுகின்றது. மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்கின்ற அனைத்து பொருட்களுக்கும் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இத்தகைய நிலையில் அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கையே நாட்டின் பணவீக்கத்திற்கும்‚ வறுமைக்கும் காரணம். ஆகவே எதிர்வரும் புத்தாண்டில் நாட்டில் பஞ்சம் ஏற்படுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...