நாளாந்தம், கடவுச்சீட்டை பெறுவதற்காக 3 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறுகின்றன என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள ஏறத்தாழ ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டை பொதுவான சேவையின் கீழ் பெற்றுக்கொள்வதற்காக ஏறத்தாழ ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரி விசாவை பெற்றுக்கொள்வதற்காக , கடவுச்சீட்டுகளுக்காக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் – என்றார்.
#SriLankaNews