24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

Share

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. படகுப் பாதையை கடலுக்குள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் (Backhoe) இயந்திரம் தடம்புரண்டு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் நேற்று (ஒக் 27) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையை கடலுக்குள் இறக்குவதற்காகப் பொக்லைன் இயந்திரம் முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இருப்பினும், இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து இந்தப் புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைத்தமையும் இந்த நிகழ்வின்போது பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...