Pg 13 Arrr
செய்திகள்அரசியல்இலங்கை

யுகதனவி விவகாரம் – நாடளாவிய போராட்டத்துக்கு பங்காளிக்கட்சிகள் தீர்மானம்!

Share

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், அரசின் இத்திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளன.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அரசு வசமே இருக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தி பங்காளிக்கட்சிகளால் அண்மையில் ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தை நாடு முழுவதும் நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் வீட்டில் நடைபெற்ற இரகசிய சந்திப்பொன்றின்போதே பங்காளிக்கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...