nuraicholai power plant
செய்திகள்அரசியல்இலங்கை

அரசுக்கு எதிராக பங்காளிக் கட்சிகள் போர்க்கொடி!

Share

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், இது விடயம் தொடர்பில் மக்களை ஓரணியில் திரட்டவும் திட்டமிட்டுள்ளன.

இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி ‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின்கீழ் பகிரங்க கூட்டமொன்றை நடத்துவதற்கு மொட்டு அரசுக்கு ஆதரவு வழங்கும் 10 பங்காளிக்கட்சிகள் தயாராகி வருகின்றன.

யுகதனவி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் வழங்குமாறு ஜனாதிபதியிடம், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும், அதனை ஜனாதிபதி நிராகரித்தார். பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்கள் மத்திக்கு செல்வதற்கு பங்காளிகள் வியூகம் வகுத்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...