24 66187f6f09bb6
இந்தியாசெய்திகள்

பண மோசடியில் இந்திய கிரிக்கட் வீரரின் சகோதரர் கைது

Share

பண மோசடியில் இந்திய கிரிக்கட் வீரரின் சகோதரர் கைது

இந்தியாவின் முன்னணி கிரிக்கட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியாவை இந்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

4.2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

17ஆவது ஐ.பி.எல். (ஐபிஎல் ) டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியை தலைவராக ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில், 4.5 கோடி மோசடி வழக்கில் ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 இல் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் அவர்களது பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து தனியார் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்ததோடு, நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழங்கப்பட்ட நிறுவனத்திற்கான பணம் சரியானமுறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் நிறுவனத்தின் விற்பனை அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மும்பை பொருளாதார குற்றப் பிரிவு பொலிஸிடம் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சார்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மொத்தமாக 4.2 கோடி ரூபாய் வரை வைபவ் பாண்டியா ஏமாற்றியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து, வைபவ் பாண்டியா மீது மோசடி வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை இன்று (வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...