pandhora
செய்திகள்அரசியல்இலங்கை

பண்டோரா ஆவண விவகாரம் – விசாரணைக்கு தெரிவுக்குழு வேண்டும்!

Share

” பண்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.” – என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

” பண்டோரா ஆவண விவகாரத்துக்கு முடிவு காணப்பட வேண்டும். அது தொடர்பில் ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன். அவ்வாறு குழு அமைத்தால் திருக்குமாரன் நடேசன், நிருபமா ராஜபக்ச உட்பட பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தலாம்.

ஊழல், மோசடி இடம்பெறவில்லையெனில் அவர்களும் துணிந்து கருத்து வெளியிடலாம்.”- என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

அதேவேளை, தயாசிறி ஜயசேகரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆதரவை வெளியிட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...