” பாகிஸ்தானில் இலங்கையரை பாதுகாக்க முயற்சி செய்த அந்நாட்டு இளைஞரை இலங்கை பாராளுன்றிற்கு வரவழைத்து கௌரவிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கின்றேன்” என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட குறிப்பிட்டுள்ளார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டவரை காப்பற்ற முயன்ற இளைஞரை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டியுள்ளார்.
எனவே, அவரை நாமும் இலங்கைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment