24 66643eef57c7c
இந்தியாசெய்திகள்

இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

Share

இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

இந்தியாவில் (India) புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்கும் வரை பிரதமர் மோடியை வாழ்த்துவது பற்றி விவாதிப்பது முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் செயலாக இருக்கும் என்று பாகிஸ்தான் (Pakistan) வெளியுறவு அலுவலக பேச்சாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேர்தல் செயல்முறை குறித்து பாகிஸ்தானிடம் எந்தக் கருத்தும் இல்லை.

எனினும் புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்கவில்லை என்பதால், பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது பற்றி பேசுவது உரிய காலத்துக்கு முன்னரான செயலாகும் என்று பேச்சாளர் மும்தாஜ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தியா உட்பட அதன் அண்டை நாடுகளுடன் நட்பு மற்றும் கூட்டுறவுகளை விரும்புவதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஈடுபாட்டிற்காக பாகிஸ்தான் எப்போதும் எதிர்பார்க்கிறது.

மேலும், குறிப்பாக ஜம்மு மற்றும் காஸ்மீரின் முக்கிய தகராறு உட்பட அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்க ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஈடுபாட்டை நாங்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக பேச்சாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...