WhatsApp Image 2021 12 20 at 9.32.37 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கூட்டங்களுக்கான அழைப்பை கேட்டே பெறவேண்டியுள்ளது! – வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் குற்றச்சாட்டு

Share

“அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, இணைந்து பயணிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் மக்களுக்கான கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளான எமக்கு உரிய வகையில் அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அழைப்பைக்கூட கேட்டுபெற வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.” – இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன்.

‘கிராமத்துடனான உரையாடல்’ மூலமான திட்டத்தின்கீழ் பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பிரதேச மட்டத்திலான கலந்துரையாடல் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

“நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இப்படியான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என்பதை இணைய ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அதன்பின்னர் அது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிபருக்கு அறிவித்துதான், அதற்கான அழைப்பை பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

குறிப்பாக இன்றைய சந்திப்புகூட ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் எனக்கும் , உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படுகின்றது. இது தவறான அணுகுமுறையாகும். ” – எனவும் வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...