New Project 44
செய்திகள்இலங்கை

அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகள்! – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அரசியல் கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனை, தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கைது செய்யுமாறு கோரி குற்ற விசாரணை பிரிவில் சிறை கைதிகளை பாதுகாக்கும் குழு முறைப்பாடு செய்துள்ளது.

லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் சட்டம் செயற்படுத்தப்பட்டு அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என கைதிகள் பாதுகாப்பு குழு குறிப்பிட்டிருந்தது.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...