தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை- வானிலை மையம்

24 659a8127303ba

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை- வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 6 வட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் இந்த மாதம் ஜனவரி வரை நீடித்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியிலும், தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version