24 659a8127303ba
இந்தியாசெய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை- வானிலை மையம்

Share

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை- வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 6 வட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் இந்த மாதம் ஜனவரி வரை நீடித்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியிலும், தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...