ரயில் மோதி கார் எரிந்து ஒருவர் சாவு!!

Wanavasala Accident 4 1024x768 1

யாழில் இருந்து கொழும்பு சென்ற உத்தரதேவி நகர்சேர் கடுகதி ரயிலுடன் வனவாசல ரயில் நிலையத்துக்கு அருகாமையில் காரொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் இன்று நண்பகல் 12.45 க்கு குறித்த கார் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து காரணமாக கார் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காருக்கு ஏற்பட்ட பாரிய அளவிலான சேதங்கள் காரணமாக கார் தீப்பற்றியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காரில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ரயில் எஞ்சினின் முன் பகுதி கடும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews

 

 

Exit mobile version