செய்திகள்அரசியல்இந்தியா

ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம்!

Share
gotta
Share

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் உள்வாங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.” – என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பது குறித்து ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தமிழர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஜனாதிபதி, குறித்த செயலணியில்மூன்று தமிழர்களை உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...