Anura Dissanayake in Parliament.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி எதற்காக? கொஞ்சம் சொல்லுங்க…

Share

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி எதற்காக உருவாக்கப்பட்டது? என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிரதமரிடம் எழுப்பினார்.

இதற்கு நாடாளுமன்றில் பதில் வழங்கிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரங்களின் அடிப்படையில் இந்தச் செயலணி உருவாக்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார். ஆனால் இந்தப் பதிலில் திருப்தி இல்லை என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இச்செயலணி தொடர்பில் ஏற்கனவே பல எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்ற சூழ்நிலையில், நாட்டில் மக்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாகப் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் இது உருவாக்கப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகத்தை அவர் எழுப்பினார்.

அதே போன்று இந்தச் செயலணி உருவாக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் யாரும் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமது கேள்விக்கு சரியான பதிலை வழங்க முடியாமல், பிரதமரும், சபை முதல்வரும் தடுமாறுவதை அறிவதாகவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...