Omicron 03 Reuters
செய்திகள்இலங்கை

இலங்கையை தாக்கப் போகும் ஒமிக்ரோன் அலை!!

Share

இலங்கை அண்மைய நாட்களில் ஒமைக்ரோன் வைரஸ் தாக்கக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் உலகின் ஏனைய நாடுகளைத் தாக்கிய பின்னரே இலங்கையில் வேகமாக பரவியது. அந்த வகையில் ஓமிக்ரோன் பிறழ்வானது தற்போது தான் உலக நாடுகளில் பரவி இருக்கின்றது.

இலங்கையில் ஓமிக்ரோன் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்தால் அது முதன்மை வைரஸாக மாறக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்துக்கு பின்னர் இலங்கையில் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு 800க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரண வீதமும் அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில் பாடசாலை மாணவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மூன்றாவது தடுப்பூசியை மக்கள் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீண்டும் ஒரு முழு முடக்கத்திற்கு தயாராக வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...