Omicron 03 Reuters
செய்திகள்இலங்கை

இலங்கையை தாக்கப் போகும் ஒமிக்ரோன் அலை!!

Share

இலங்கை அண்மைய நாட்களில் ஒமைக்ரோன் வைரஸ் தாக்கக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் உலகின் ஏனைய நாடுகளைத் தாக்கிய பின்னரே இலங்கையில் வேகமாக பரவியது. அந்த வகையில் ஓமிக்ரோன் பிறழ்வானது தற்போது தான் உலக நாடுகளில் பரவி இருக்கின்றது.

இலங்கையில் ஓமிக்ரோன் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்தால் அது முதன்மை வைரஸாக மாறக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்துக்கு பின்னர் இலங்கையில் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு 800க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரண வீதமும் அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில் பாடசாலை மாணவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மூன்றாவது தடுப்பூசியை மக்கள் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீண்டும் ஒரு முழு முடக்கத்திற்கு தயாராக வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...