WHO
செய்திகள்உலகம்

பல நாடுகளை தாக்கியுள்ள ஒமிக்ரொன் – மீண்டும் எச்சரிக்கும் WHO

Share

பல நாடுகளை தாக்கியுள்ள ஒமிக்ரொன் – மீண்டும் எச்சரிக்கும் WHO

ஒமிக்ரொனால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல நாடுகள் பாதிக்கும் என WHO எச்சரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் திரிவு ஆனா ஒமிக்ரொன் சுமார் 23 நாடுகளில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமிக்ரொன் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் தாக்கும் திறன் கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில்ஊடகவியலாளர்களுக்கு ஜெனிவாவில் கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ்,

தென் ஆப்பிரிக்காவில் ஜெனிவாவில் கொரோனா வைரஸின் திரிவான ஒமிக்ரொன் வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

முதலில் 4 அல்லது 5 நாடுகளில் காணப்பட்ட ஒமிக்ரொன் வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வைரஸ் மேலும் பல நாடுகளுக்கு விரைவாக பரவுமெனவும் எச்சரித்துள்ளார்.

ஒமிக்ரொனின் இந்த தாக்கத்தை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஒமிக்ரொன் கண்டுபிடிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, அமெரி்க்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்மை குறிப்பிடத்தக்கது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...