fuel tanker blast
செய்திகள்உலகம்

ஆப்ரிக்காவில் வெடித்த எண்ணெய் குதம் – 91 பேர் உடல் கருகிச் சாவு

Share

ஆப்ரிக்காவில் வெடித்த எண்ணெய் குதத்தல் 91 பேர் உடல் கருகி சாவடைந்துள்ளனர்.

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டின் ப்ரீடவுன் நகரத்தில் உள்ள எண்ணெய் குதத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 90-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி சாவடைந்ததாக அந்நாட்டுச் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இச்செய்தி தொடர்பில் தெரியவருவது,

எண்ணெய் குதத்தில் பரவூர்தி ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் குதம் அருகே நடந்த இந்த விபத்தினால் தீப்பிடித்து அங்குள்ள பெற்றோல் சேமிப்பு கிடங்கு வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை தமது அரசு அனைத்தையும் செய்யும் என கூறியுள்ளார்.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...