harshana rajakaruna
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை சர்வதேசத்திடம் வழங்குங்கள்! – ஹர்ஷன ராஜகருணா

Share

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நடவடிக்கையை சர்வதேச விசாரணை ஆணைகுழுவுக்கு வழங்க வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுவிவாதத்தின் போதே முன்வைத்தார்.

இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவர்களால் ஈஸ்டர் தாக்குதலுக்கு தீர்வு பெற்று தருவதாக கடந்த தேர்தல் மேடைகளில் பாரிய அளவில் பேசப்பட்டன. ஆனால் இப்பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வுகள் எட்டப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் தண்டனைகள் பெறும் வரை நாம் குரல் கொடுப்போம் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து உரையாற்றிய இவர்,

பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளில் அரசியல்வாதிகள் தலையிடுவதால் விசாரணைகளை மேற்கொள்ள இயலாது செயலிழந்து நிற்பதை நாம் காணுகின்றோம்.

தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபரின் வாக்குமூலம் பெறப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை சர்வதேசத்துக்கு வழங்குவதன் மூலமே கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க மக்களுக்கும் நாம்  நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...