IMG 1357 1080
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பருத்தித்துறையில் 48 மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்தி: நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அடிக்கல் நாட்டினார்!

Share

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை ஆனைவிழுந்தான் சுடலை வீதியை புனரமைப்பதற்கான உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு விழா இன்று சனிக்கிழமை பிற்பகல் 5:30 மணியளவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 48 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பிரதான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பின்வரும் அதிகாரிகளும் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்:

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருளிங்கநாதன், பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கற்கோவளம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்

இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்டகால போக்குவரத்து சிரமங்கள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...