WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கவில்லை! – தயாசிறி ஜயசேகர

Share

” நாம் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக நாட்டை பாதுகாக்கவே போராடுகின்றோம். எதிர்காலத்திலும் போராடுவோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ‘மக்கள் சபை’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“எதற்காக இந்த அவசர கூட்டம் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் சிலர் பலகோணங்களில் கருத்துகளை வெளியிடுகின்றனர். ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசை உருவாக்கவோ நாம் அணி திரளவில்லை. மாறாக மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாப்பதற்காகவே சமராடுகின்றோம்.

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பது திரைசேரி செயலாளரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அதற்கான திருத்தங்களை முன்வைப்போம். பழைய முறையில் செல்வதற்கு அனுமதிக்கமாட்டோம்.

தேசிய முக்கியத்துவம்மிக்க வளங்கள் அரசு வசம் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...