c373be9e 57749896 101
செய்திகள்உலகம்

3 மில்லியன் தடுப்பூசிகளை நிராகரித்தது வடகொரியா!!

Share

நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 3 மில்லியன் கொவிட் – 19 தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலகில் நிலவிவரும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, கொவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடொன்றுக்கு அவற்றை வழங்குமாறு வட கொரியா கோரிக்கை விடுத்துள்ளது எனவும் ஐ.நா சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொவக்ஸ் திட்டத்தின் கீழ், சீனாவில் தயாரிக்கப்பட்ட சினொவெக்ஸ் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு நன்கொடையாக வழங்கப்படவிருந்தன. இந்த நிலையிலேயே வடகொரியா மேற்படி தெரிவித்துள்ளது.

இதேவேளை. கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி வரை வடகொரியாவில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 37 ஆயிரத்து 291 பேருக்கும் காய்ச்சல் போன்ற நோய்கள் காணப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதியாகவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் அதன் வாராந்த அறிக்கையில் கூறியுள்ளது.

உலகலாவிய ரீதியில் கொரோனாத் தொற்று ஆரம்பமாகியவுடனேயே, அதற்கெதிராக மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை வட கொரியா அமுல்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...