gover
செய்திகள்இலங்கை

நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது!

Share

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் பிரியத் பண்டு தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டால் நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், குடிதண்ணீர் விநியோகத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு பிரதேசத்திலும் மின் தடை ஏற்பட்டால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு மின்சாரம் வழங்குவதற்கு சபை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

மேற்கூறியவாறு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டால் அந்த நேரத்தில் விநியோகத்திற்காக தண்ணீரை சேகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நீர் விநியோகத்தை துண்டிக்கும் நிகழ்வு இடம்பெறும் என தாம் நினைக்கவில்லை எனவும், நீண்டகாலமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மின்சார சபை இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....