gover
செய்திகள்இலங்கை

நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது!

Share

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் பிரியத் பண்டு தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டால் நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், குடிதண்ணீர் விநியோகத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு பிரதேசத்திலும் மின் தடை ஏற்பட்டால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு மின்சாரம் வழங்குவதற்கு சபை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

மேற்கூறியவாறு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டால் அந்த நேரத்தில் விநியோகத்திற்காக தண்ணீரை சேகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நீர் விநியோகத்தை துண்டிக்கும் நிகழ்வு இடம்பெறும் என தாம் நினைக்கவில்லை எனவும், நீண்டகாலமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மின்சார சபை இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 5 2
இலங்கைசெய்திகள்

அறுகம்பே பாலியல் அத்துமீறல் முயற்சி: சந்தேகநபரைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவி கோரல் – பொலிஸ் இலக்கங்கள் அறிவிப்பு!

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட...

images 17
செய்திகள்இலங்கை

கந்தானையில் பரபரப்பு: திருடிய லொறியுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரால் அடுத்தடுத்து இரண்டு விபத்துக்கள் – ஒருவர் பலி, 4 பேர் காயம்!

கந்தானைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியா வீதிப் பிரதேசத்தில் நேற்று (நவ 15) இரவு, திருடப்பட்ட லொறி...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதல்: ஒரு படகு மூழ்கியது – மீனவர் வைத்தியசாலையில்!

மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (நவ 15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற...

grads
செய்திகள்இலங்கை

கல்வி, உயர் கல்வி அமைச்சின் வட்டி இல்லாத மாணவர் கடன்: 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் – நவம்பர் 30 கடைசித் திகதி!

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின்...