Black Fungus
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கறுப்புப் பூஞ்சைத் தொற்றால் மரணம் பதிவாகவில்லை!-

Share

காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவர் கறுப்புப் பூஞ்சை நோயால் உயிரிழக்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், குறித்த கொரோனா மரணம் செப்டம்பர் 26ஆம் திகதி பதிவானதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, நுரையீரலில் அசாதாரணம் காணப்பட்ட பின்னர் நுரையீரல் திசு மாதிரியை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

குறித்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவரின் நுரையீரலில் கறுப்புப் பூஞ்சைகள் இருப்பதாக கோடிட்டிக் காட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த மரணம் நிமோனியாவால் நிகழ்ந்ததென்றும் மரணத்திற்கு காரணம் கறுப்புப் பூஞ்சைத் தொற்று அல்ல எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கண்டறியப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...