ali
செய்திகள்இலங்கை

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை இல்லை! விரைவில் சட்ட திருத்தம்

Share

குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பான புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் .

இந்த புதிய சட்ட திருத்தம் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

குற்றத்தில் ஈடுபடும் போது நபரொருவர் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அவருக்கெதிராக மரண தண்டனை விதிக்கப்படவோ அல்லது அமல்படுத்தப்படவோ கூடாது என கூறியுள்ளார்

எனினும் அதற்குப் பதிலாக பொருத்தமான வேறொரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என புதிய திருத்தம் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்

இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த ஒரு சிறப்புக்குழுவினால் எடுக்கப்பட்ட முடிவினடிப்படையில் இந்த திருத்தம் முன்வைக்கப்படவுள்ளதென நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...