india 5
செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Share

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூர் துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் T 20 துடுப்பாட்ட போட்டியில் விளையாடின.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 164 ஓட்டங்களை எடுத்தது.

165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா துடுப்பெடுத்தாடியது.

அணித்தலைவர் ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ராகுல், 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

ராகுல் மற்றும் ரோகித் 50 ஓட்டங்களுக்கு இணையட்டம் அமைத்தனர்.

பின்னர் சூரியகுமார் யாதவ், ரோகித் உடன் சேர்ந்து 59 ஓட்டங்களுக்கு இணையட்டம் அமைத்தார்.

அணித்தலைவர் ரோகித் 36 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

சூரியகுமார், 40 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயஸ் ஐயர் 5 ஓட்டங்களிலும், வெங்கடேஷ் ஐயர் 4ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடைசி 4 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அக்சர் பட்டேல் மற்றும் பண்ட் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரின் நான்காவது பந்தில் பண்ட் நான்கு ஓட்டங்களை எடுக்க இந்தியா 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#SPORTS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...