சாரதி அனுமதி பத்திர விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகள் பரீட்சை திணைக்களத்தினால் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து திணைக்களத்தினால் நடாத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சைகளுக்கு மேலதிகமாக, பரீட்சைத் திணைக்களம் குறித்த எழுத்து மூலப் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
மக்கள் போலி சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
#SriLankaNews