நாடளாவிய ரீதியில் பணியாற்றும் புலனாய்வாளர்கள் அனைவரும் தங்களின் முடிகளை திருத்தி சவரம் செய்து கொள்ள வேண்டும் என புதிய நடைமுறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சிறப்பு பணியகத்தில் பணியாற்றும் போதைப்பொருள், பயங்கரவாதம் மற்றும் அரச பாதுகாப்பில் கடமையாற்றும் புலனாய்வாளர்களுக்கே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
இதனை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் குறித்த பொலிஸ்மா அதிபர்கள் அறிவிக்க வேண்டும். அத்தோடு புலனாய்வாளர்களுக்கான நேர்த்தியான சீருடைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
#SriLankaNews