ரணில் தலைமையில் மலர்கிறது புதிய அரசு!

Ranil

நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தேசிய அரசொன்று அமைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு உருவாக்கப்படும் அரசில் ரணில் விக்கிரமசிங்கவும் அங்கம் வகிப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு அவசியமாகவுள்ள பாரிய சர்வதேச உதவியை பெறும் நோக்கத்துடனேயே தேசிய அரசை அமைக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய அரசில் ரணிலுக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படக்கூடும்.

#SriLankaNews

Exit mobile version