போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

images 1 5

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கால் வைத்தால் கைது செய்யப்படுவார் எனப் பல நாடுகள் அறிவித்துள்ளது இஸ்ரேலுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் காசாவைத் தாக்கத் தொடங்கிய இஸ்ரேல், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்தது. இது இனப்படுகொலை எனப் பல நாடுகளும் கண்டித்தன. இதன் விளைவாக, நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்குப் பிடியாணை (Arrest Warrant) பிறப்பிக்கப்பட்டது.

தற்போது போர் நிறுத்தம் நடைமுறையாகியுள்ள நிலையிலும், நெதன்யாகு மீதான பிடியாணை நடைமுறையில் உள்ளது.

இதனால், பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் பெஞ்சமின் நெதன்யாகு மீதான சர்வதேச பிடியாணையைச் செயல்படுத்துவோம் எனக் கூறியுள்ளதால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version