images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

Share

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கால் வைத்தால் கைது செய்யப்படுவார் எனப் பல நாடுகள் அறிவித்துள்ளது இஸ்ரேலுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் காசாவைத் தாக்கத் தொடங்கிய இஸ்ரேல், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்தது. இது இனப்படுகொலை எனப் பல நாடுகளும் கண்டித்தன. இதன் விளைவாக, நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்குப் பிடியாணை (Arrest Warrant) பிறப்பிக்கப்பட்டது.

தற்போது போர் நிறுத்தம் நடைமுறையாகியுள்ள நிலையிலும், நெதன்யாகு மீதான பிடியாணை நடைமுறையில் உள்ளது.

இதனால், பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் பெஞ்சமின் நெதன்யாகு மீதான சர்வதேச பிடியாணையைச் செயல்படுத்துவோம் எனக் கூறியுள்ளதால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...

1761139778 Piumi Hansamali Sri Lanka Ada Derana 6
செய்திகள்இலங்கை

“பத்மே எனது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத்தான் சொன்னேன்”: பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு பியூமி ஹன்சமாலி விளக்கம்!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...

23 64056e32f0004
செய்திகள்இலங்கை

வாயால் மின் இணைப்பு கொடுக்க முயன்ற மாற்றுத்திறனாளி: யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் நேற்று...