Charles Nirmalathan 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கிற்கு ரயிலில் எரிபொருள் விநியோகிக்க வேண்டும் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

Share

காங்கேசன்துறைக்கு கொழும்பில் இருந்து ரயில் மூலம் வடக்கிற்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை முன்வைத்தார்.

நேற்றைய தினம் வலு சக்தி மற்றும் மின் சக்தி அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தின் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

கொழும்பிலிருந்து பவுசர் மூலமாகவே வடக்கிற்கு தேவையான எரிபொருள்கள் காங்கேசன்துறைக்கு விநியோகிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தாமதங்களும் வீண் செலவுகளும் ஏற்படுகின்றன. ரயில் மூலமாக நேரடியாக காங்கேசன்துறைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் காலதாமதமும், செலவும் குறைக்கப்படுகின்றன.

எரிபொருள் விலையின் தொடர் அதிகரிப்பு மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. எரிபொருளின் விலை அதிகரிக்காது இருக்க அரசு நிவாரணங்களை அமைச்சுக்கு வழங்குவதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...