03 photo
செய்திகள்இலங்கை

இயற்கை எய்தினார் நல்லூர் ஆலய நிர்வாகி!

Share

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் இன்று சிவபதமடைந்தார்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார், தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

1964 ஆம் ஆண்டு டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக குமாரதாஸ மாப்பாண முதலியார் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு, இந்து சயமப் பேரவை இரங்கல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாப்பாண முதலியாரின் இழப்பு பாரிய இழப்பு எனவும், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் பக்தர்கள் அனைவருக்கும் தனதும், மாநகர சபையினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...