Mullaithivu
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முப்படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகளுக்குள் முல்லைத்தீவு!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள வீதித் தடைகளிற்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வீதி சோதனை நடவடிக்கைள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மாவீரர் துயிலுமில்லங்களைச் சூழவும் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தண்ணீர்ஊற்றுசந்தி, ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் காணப்படும் சுமார் 15 இற்கும் மேற்பட்ட வீதிதடைகளில் வீதியால் பயணிப்பவர்கள் தீடீர் சோதனைகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

வாகனங்கள் சோதனை செய்யப்படுவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குள் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் தேராவில் துயிலும் இல்லங்கள் என மாவட்டத்தில் உள்ள துயிலுமில்லங்களை அண்மித்த வீதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...