iStock 481738412
செய்திகள்அரசியல்இலங்கை

மின்தடையால் மின்தூக்கியில் சிக்கிய எம்.பிக்கள்!!!

Share

நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர்கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஆகியோரே மின்தூக்கியில் சிக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் மின் துண்டிக்கப்பட்ட போது நாடாளுமன்ற வளாகத்துக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டதுடன், இதன்போது மின்தூக்கியின் செயற்பாடும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலிடம் வினவிய போது, ​​தானும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல ஆகியோரும் சுமார் 20 நிமிடம் மின்தூக்கியில் சிக்கியிருந்தோம்.

இதனால் தாம் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் உயிருக்கு பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 13
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான பயணம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில்,...

p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...