26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

Share

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், விவசாய அமைச்சினை நிறுவுவதற்காக ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் பெருந்தொகை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டது. இதில் பாரிய நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பில் லஞ்ச அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் போது அமைச்சராகப் பணியாற்றியவர் என்ற அடிப்படையில், அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (05) காலை ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கமையவே, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு முன்னால் முன்னிலையாகி, இந்த ஒப்பந்தம் தொடர்பான விளக்கங்களை வழங்கியுள்ளார்.

இந்தக் கட்டிட ஒப்பந்தம் காரணமாக அரசுக்குப் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஏனைய சில முன்னாள் அமைச்சர்களிடமும் விசாரணைகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...