20220202 124549 scaled
செய்திகள்இலங்கை

இலங்கையின் கரையோரப் பாதைகள் ஊடாக மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம்

Share

இலங்கையின் கரையோரப் பாதைகள் ஊடாக இலங்கைத் தீவை சுற்றி 1380 km தூரத்தை 35 தொடக்கம் 40 மணித்தியாலங்களுக்குள் கடக்க இமையவன் என்ற இளைஞன் திட்டமிட்டுள்ளார் .

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

நாளை வியாழக்கிழமை காலை 5 மணிக்கு இலங்கையில் யாழ். மாவட்டத்தில் உள்ள துரையப்பா விளையாட்டு அரங்கில் இருந்து மோட்டார் சைக்கிளில் இப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

இவர் இலங்கையின் கரையோரப் பாதைகள் ஊடாக இலங்கைத் தீவின் அண்ணளவாக 1380 km
தூரத்தை 35 தொடக்கம் 40 மணித்தியாலங்களுக்குள் பயணம் செய்து மீண்டும் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக பாதிக்கப்பபட்டு படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கும் இலங்கை மக்களை மேலும் ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையின் 74வது சுதந்திரதினத்திற்கான வாழ்த்தினை கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த பயணம் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கத்தில் இருந்து பூநகரி ஊடாக மன்னார் மாவட்டத்தையும், மன்னார் மாவட்டத்தில் இருந்து அடப்பன்குளம், நொச்சியாகம ஊடாக புத்தளம் மாவட்டத்தையும் அடைந்து, பின்னர் முறையே சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களின் ஊடாகச் சென்று மொனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய நகரத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்னும் நகரத்தை அடைந்து பின்னர் மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைக் கடந்து வடமாகாணத்தில் உள்ள பரந்தன், கொடிகாமம், பருத்தித்துறை, காங்கேசன்துறை மற்றும் பொன்னாலை ஆகிய நகரங்களினுாடாக மீண்டும் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்து குறித்த சுற்றுப் பயணம் நிறைவு செய்யப்படவுள்ளது.

குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் இலங்கையைச் சுற்றி மோட்டார் சைக்கிளோடு சுற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...