1642848962 Fire News 02
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் தீக்கிரையான தாய், மகள்! – சந்தேகத்துக்கிடமான பொருட்கள் மீட்பு!

Share

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் 20 ஆம் திகதி நள்ளிரவு 11.50 மணியளவில் தாயும் மகளும் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

ஆனந்தராசா சீதேவி (வயது – 47) என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளுமே லக்சிகா (வயது – 17) தீக்கிரையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் சம்பவ இடத்துக்கு இன்று (22) காலை விஜயம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெற்றோல் நிரப்பப்பட்ட பெற்றோல், கத்தி ஒன்றும் மற்றும் தொலைபேசி ஒன்று ஆகியவை தடயவியல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1642848962 Fire News 8 1642848962 Fire News 2

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...