1642848962 Fire News 02
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் தீக்கிரையான தாய், மகள்! – சந்தேகத்துக்கிடமான பொருட்கள் மீட்பு!

Share

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் 20 ஆம் திகதி நள்ளிரவு 11.50 மணியளவில் தாயும் மகளும் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

ஆனந்தராசா சீதேவி (வயது – 47) என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளுமே லக்சிகா (வயது – 17) தீக்கிரையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் சம்பவ இடத்துக்கு இன்று (22) காலை விஜயம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெற்றோல் நிரப்பப்பட்ட பெற்றோல், கத்தி ஒன்றும் மற்றும் தொலைபேசி ஒன்று ஆகியவை தடயவியல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1642848962 Fire News 8 1642848962 Fire News 2

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...