ranil wickremesinghe at parliament
செய்திகள்அரசியல்இலங்கை

அரச கடன் தொடர்பில் மாதாந்த அறிக்கை! – ரணில் கோரிக்கை

Share

அரச கடன் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் மாதாந்தம் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 148 ஆவது சரத்தின் பிரகாரம் அரச நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. எனினும், நாம் தகவல்களை கோரியிருந்தாலும் அவை இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே, மாதாந்தம் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் முதல் வாரத்திலேயே அரச கடன் மற்றும் கடன் சேவைகள் தொடர்பில் அறிக்கையொன்றை முன்வைக்குமாறு அரச கணக்குகள் பற்றி குழுவிடம் கோரிக்கை விடுக்கின்றேன். அப்போது அது பற்றி விவாதிக்க முடியும். நிதி விவகாரத்தில் நிலையான தன்மையை அதன்மூலம் பேணமுடியும்.

அத்துடன், அந்திய செலாவணி கையிருப்பு தொடர்பில் இன்று உரிய தகவல் வழங்கப்படுவதில்லை. கடன் பத்திரங்களும் அதில் உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே, சரியான தகவல்கள் அவசியம்.

தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, ஒரு பில்லியன் டொலருக்கும் குறைவான அந்நிய செலாவணி கையிருப்பே இருப்பதாக கதை அடிபடுகின்றது. எனவே, மாதாந்தம் அறிக்கை முன்வைத்தால் உண்மை தன்மையை அறியக்கூடியதாக இருக்கும்.” – என்றார்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...