இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் செல்போன் டவர் திடீரென காணாமல் போயுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் குறித்த நிறுவனத்தால் பொலிஸ் நிலையினத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரே காணாமல் போயுள்ளது என முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளின் அடிப்படையில், ஒப்பந்தக்காரர்களிடையே பிரச்சினைகள் காணப்பட்டிருக்கலாம் எனவும், அதனாலேயே செல்போன் டவர் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் – அல்லது டவர் திருட்டு போயிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndiaNews