harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

Share

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து (Miss Finland) பட்டம் வென்ற சாரா ஜாஃப்சே (Sara Jafse) தனது மகுடத்தை இழந்துள்ளார்.

சாரா ஜாஃப்சே தனது கண்களை இழுத்துப் பிடித்து ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதற்கு கீழே “சீனருடன் உணவு உண்ணுதல்” என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து விளக்கம் அளித்த சாரா, தலைவலியைப் போக்கவே அவ்வாறு செய்ததாகவும், தனது நண்பர் அனுமதியின்றி அந்தப் படத்தைப் பகிர்ந்துவிட்டதாகவும் கூறினார். டிசம்பர் 8 அன்று அவர் பகிரங்க மன்னிப்பும் கோரினார்.

சாராவின் விளக்கத்தை ஏற்க மறுத்த மிஸ் பின்லாந்து அமைப்பு, அவரது பட்டத்தைப் பறித்து உத்தரவிட்டது. “இனவெறி எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என்று அந்த அமைப்பு ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் இத்துடன் முடிவடையாமல், பின்லாந்தின் ஆளும் கூட்டணியில் உள்ள சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் சாராவுக்கு ஆதரவாகத் தங்கள் கண்களை இழுத்துப் பிடித்தபடி புகைப்படங்களை வெளியிட்டனர். இது ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நிலைமை சர்வதேச இராஜதந்திர சிக்கலாக மாறியதையடுத்து, பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ (Petteri Orpo) நேரடியாகத் தலையிட்டார். அவர் ஜப்பான் மற்றும் தென்கொரிய மொழிகளில் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கடிதங்களை வெளியிட்டுள்ளார். “இந்தச் செயல்கள் பின்லாந்தின் சமத்துவ விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை. இனவெறிக்கு எங்கள் நாட்டில் இடமில்லை” என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் பின்லாந்திற்கு வரும் ஆசியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற அச்சம் அந்நாட்டு சுற்றுலாத் துறையினரிடையே எழுந்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...