தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடினார். வழக்கத்தை விட தி.மு.க.வினர் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடினார்கள்.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க.வின் பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தனது தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
மக்கள் பணி செய்வதையே உறுதிமொழியாக எடுத்து இருக்கிறேன். தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராகப் போகிறேன் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். அதுபற்றி தி.மு.க. தலைவர் (மு.க.ஸ்டாலின்) தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
#India
Leave a comment