milk
செய்திகள்இலங்கை

பாலின் கொள்முதல் விலை அதிகரிப்பு!

Share

பால் பண்ணையாளர்களின் ஒரு லீற்றர் திரவப் பாலுக்கான கொடுப்பனவு 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவன  தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் விலை அதிகரிப்பு பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவன  தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இவ்விலை உயர்வால், விவசாயிகளுக்கு மிக உயர்ந்த தரமான பால் லீற்றருக்கு சுமார் ரூ.100 கிடைக்கும் என்றும், பாலின் தரத்தைப் பொறுத்து செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பால் பண்ணையாளர்களால் வழங்கப்படும் பாலின் அளவுக்கேற்ப லீற்றருக்கு செலுத்தப்படும் தொகையும் மாறுபடுமெனவும், லீற்றரின் கொள்ளளவு அதிகரிக்கும் போது விவசாயியின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...