லியோனல் மெஸ்ஸி 7-வது முறையாக பேலன் தோர் விருதை வென்றுள்ளார்.
பேலன் தோர் விருது சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதாகும்.
இவ்விருத்தை 7-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 தொடக்கம் ஆண்டுதோறும் பேலன் தோர் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார்.
2009 தொடக்கம் 2021 என 7 ஆண்டுகளில் இவ்விருதை மெஸ்ஸி வென்றுள்ளார்.
இவ் விருதுக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லிவான்டாவ்ஸ்கிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கும் இடையில் வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் லியோனல் மெஸ்ஸி வாக்கெடுப்பில் வென்று விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#sports
Leave a comment