tamilni 41 scaled
இந்தியாசெய்திகள்

மொத்தமாக 250 லிட்டர்.., விஷம் கலந்திருப்பது தெரிந்தும் பண ஆசையில் சாராயத்தை விற்ற வியாபாரி

Share

மொத்தமாக 250 லிட்டர்.., விஷம் கலந்திருப்பது தெரிந்தும் பண ஆசையில் சாராயத்தை விற்ற வியாபாரி

கள்ளச்சாராயத்தை விற்ற வியாபாரி கன்னுகுட்டி என்பவர் பொலிஸார் விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார்.

தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதில், தற்போது வரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சாராயத்தை விற்ற கன்னுக்குட்டி, விஜயா, தாமோதரன், ஜோசப் ராஜா, முத்து, சின்னத்துரை ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மருத்துவர்கள் மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் சாராயத்தில் மெத்தனாலின் அளவு அதிகரித்து தான் உயிரிழப்பிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து சாராய வியாபாரிகளிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். இதில், ராமர் என்கிற சாராய வியாபாரி தனக்கான பங்கினை வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். அப்போது ராமரின் தந்தை அந்த சாராயத்தை குடித்ததும் அரை மணி நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்த ராமர் மற்ற வியாபாரிகளுக்கு போன் செய்து சாராயத்தை விற்க வேண்டாம் எனவும், அதில் விஷம் கலந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பின்னர்,வியாபாரிகள் சாராயத்தை கொட்டி அழித்துள்ளனர். ஆனால், இதில் கன்னுகுட்டி என்ற வியாபாரி மட்டும் விஷம் கலந்திருப்பது தெரிந்தும் அதனை விற்பனை செய்துள்ளார்.

அதாவது, தன்னிடம் இருந்த 330 லிட்டர் விஷ சாராயத்தில் 250 லிட்டர் வரை விற்றுள்ளார். இவரிடம் வாங்கி குடித்தவர்களுக்கு தான் தற்போது உயிரிழந்து வருகிறார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...