sugirthan tna
செய்திகள்அரசியல்இலங்கை

பண முதலைகளால் கடல்வளம் அழிப்பு!

Share

கடலை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பல பண முதலைகள் அந்த கடல்வளத்தை அழிக்க நினைக்கிறார்கள்.

இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் றோலர் தொழில் செய்யும் பலர் அரச உத்தியோகத்தர்களாகவும் வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களாகவுமே காணப்படுகின்றனர்.

ஆனால் தொடர்சியாக கடல் தொழிலில் ஈடுபடும் ஒரு சிலரே றோலர் படகு வைத்துள்ளனர். அவர்கள் தமது குடும்பத்தை மட்டுமல்ல கடலையும் நேசிப்பவர்கள்.

ஆனால் கடலை கொள்ளையடிப்பதற்கென்றே முதலீடு செய்தவர்கள், கடலை அழிப்பதற்கென எந்த எல்லைக்கும் போவார்கள். அவ்வாறானவர்களைக் கண்டு நாங்கள் பயப்படப்போவது இல்லை.

தாம் வாழ்வதற்காக எமது கடல் வளத்தையும், மண் வளத்தையும் சிலர் அளித்து வருகின்றனர். இவ்வாறான சம்பவங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

எங்கள் உருவப் பொம்மைகளை மட்டுமல்ல, எங்களை சுட்டுப்போட்டாலும் எமது வளங்களை அழிப்பவர்களுக்கு எதிராக நாம் போராடிக்கொண்டே இருப்போம்.

மணல் கொள்ளைக்கு எதிராக குடத்தனையில் போராடிய நண்பன் கேதீஸை சுட்டுக் கொன்றனர். அதனை நாம் மறக்கவில்லை. நாம் அதற்கு பயந்து மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமல் பயந்து ஒதுங்கவும் இல்லை. எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...