கிளி. உமையாள்புரத்தில் மேலும் பல வெடிபொருட்கள் மீட்பு!!

Explosives Found at Umayalpuram in Kilinochchi Including Mortar Bombs

கிளிநொச்சி, உமையாள்புரம், சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான பழைய எறிகணைகள் மற்றும் வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினால் வெட்டியபோது வெடித்ததில் 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இதேவேளை 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் ஒரு சில வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து விசேட அதிரடிப் படையினரும் பொலிசாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்தும் வீட்டு காணிக்குள் இருந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

#SrilankaNews

Exit mobile version