யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையால் கடந்த 48 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் மேற்படி தெரிவித்தார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஜே-141, ஜே-142 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்பட்ட பகுதிகளிலேயே மழையுடன் கூடிய காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக பெற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த காலநிலையானது மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews

